Wednesday, November 26, 2008

தமிழில் நீளமான 'பாலிண்ட்ரோம்'(Palindrome)

முதலில் 'பாலிண்ட்ரோம்' என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு அதைப் பற்றிச் சொல்லி விடுகின்றேன். வலம் இடமாக அல்லது இடம் வலமாக எந்த திசையில் (முன்னாகவும் பின்னாகவும்) வாசித்தாலும் ஒரே வடிவம் மற்றும் பொருள் தரும் வார்த்தை அல்லது வாக்கியம். இதற்கு சரியான தமிழ்ச்சொல் மறந்துவிட்டேன்(கண்டிப்பாக விரைவில் கூறிவிடுகின்றேன். யாருக்காவது தெரிந்தாலும் கூறலாம்).


நண்பர் சந்திரமௌளீ(நன்றி) அவர்களின் உதவியால் மேற்கண்ட ஐயம் தெளிந்தது.

இதன் தமிழ் வடிவம் "மாலை மாற்று" .


சிறு உதாரணங்கள் -
'மாலா போலாமா?'
'தேரு வருதே'

தமிழின் நீளமான இவ்வகை அமைப்பு-
'யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா காணா காமா காழீயா மாமாயா நீ மாமாயா' - திருஞான சம்பந்தரின் மாலை மாற்றுப் பதிகத்திலிருந்து.

இதன் பொருள் - 'சிற்றுயிரான நாங்கள் கடவுள் என்றால், பொருத்தமா? நீ ஒருவனே கடவுள் என்றால். பொருந்தும். ஆம் ஆம்!'

- மூலம்- அமரர் 'சுஜாதா' வின் 'கற்றதும்... பெற்றதும்...'

No comments: